போட்டித்தேர்வு தொடர் 20: சர்வதேச சூழலியல், சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள்

ராம்சர் மாநாடு 1971-ல் ஈரானின் ராம்சர் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1975-ல் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதும் இருந்து 90 சதவீத ஐ.நா. உறுப்பு நாடுகள், ‘ஒப்பந்தக் கட்சிகள்’ ஆக இதை ஒப்புக்கொண்டன. சதுப்பு நிலங்கள் தொடர்பான இந்த ஒப்பந்தம், தேசிய நடவடிக்கைக்கான கட்டமைப்பையும், சதுப்பு நிலங்கள் மற்றும் அவற்றின் வளங்களைப் பாதுகாப்பதற்கும், சிறப்பாக பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது.

இந்தியாவில் இது 1982 பிப்.,1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் தற்போது 10,93,636 ஹெக்டேர் பரப்பளவை கொண்ட 49 தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக (ராம்சர் தளங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘பாயின்ட் கலிமேர் (கோடியக்கரை) வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் ராம்சர் தளம் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ral8JI4
via IFTTT
Test ads text