கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்றுதிறக்கப்படுகின்றன. சென்னைஅடுத்த புழல் அழிஞ்சியம்பாக்கத்தில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் முதல்வர் ஸ்டாலின், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 13) திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, முதல் நாளில் மாணவர்களை வரவேற்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளிக்கல்வித் துறைஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r6dXNI5
via IFTTT
Post a Comment